Himachal: இமாச்சலப்பிரதேசத்தில் கடும் மழைப்பொழிவு: காணாமல்போன 50 பேர்; குலு, மண்டி, கங்க்ராவுக்கு மழைக்கான ரெட் அலெர்ட்
Himachal: இமாச்சலப்பிரதேசத்தில் கடும் மழைப்பொழிவு காரணமாக 50 பேர் காணாமல்போயினர்; குலு, மண்டி, கங்க்ராவுக்கு மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Himachal: இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி, சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் மேக வெடிப்புகள் காரணமாக கடுமையான மழைப்பொழிவு மற்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 50 பேரைக் காணவில்லை என தெரியவருகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) காங்க்ரா, குலு மற்றும் மண்டிக்கு, மழைப்பொழிவுக்கான ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த மழையால் வெள்ளத்தில் சிக்கிய மக்கள்:
1. இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆறு மாவட்டங்களுக்கு திடீர் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுமைய அறிக்கையின்படி, காங்க்ரா, குல்லு, மண்டி, சிம்லா, சம்பா மற்றும் சிர்மௌர் ஆகிய மாவட்டங்கள் மழைப்பொழிவால் ஆபத்தில் உள்ளன.