Chhattisgarh govt: விவசாயிகளிடம் இருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் கொள்முதல் செய்ய சத்தீஸ்கர் அரசு முடிவு
ஏற்கனவே ஆதரவு விலையில் நெல்லை விற்பனை செய்த விவசாயிகளும் ஏக்கருக்கு 21 குவிண்டால் என்ற அளவில் நெல்லை விற்பனை செய்ய வசதி செய்து தரப்படும்.

சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் (HT file)
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விவசாயிகளிடம் இருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல்லை ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய சத்தீஸ்கர் அரசு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரவுள்ள நிலையில், ஏற்கனவே ஆதரவு விலையில் நெல்லை விற்பனை செய்த விவசாயிகளும் ஏக்கருக்கு 21 குவிண்டால் என்ற அளவில் நெல்லை விற்கும் வசதி அளிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய 'மோடியின் உத்தரவாதம்' என அறிவித்திருந்தது. பாஜக அரசு தற்போது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தொடங்கியுள்ளது.