பிரெட்டி சூறாவளிக்கு மலாவி நாட்டில் 326 பேர் பலி
Malavi Affected : பிரெட்டிசூறாவளியால்மலாவிநாட்டில் 326 பேர் பலியாகிஉள்ளனர். அத்துடன் மேலும் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்.
ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மலாவியில், பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கைவிடப்பட்டு இருந்தது.
இதனால், பெருவெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை எச்சரித்து இருந்தது.
இதற்கேற்ப சூறாவளி புயலால் கடந்த 4 நாட்களாக பரவலாக பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மலாவியில் பிரெட்டி சூறாவளி புயலுக்கு 326 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஐ.நா.வுக்கான மனிதநேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி தெரிவிக்கிறது.