Murder case Against Indian Fisherman: மாலுமி மரணம்! இலங்கை கடற்படையினர் கைது செய்த 10 இந்திய மீனவர்கள் மீது கொலை வழக்கு
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்த 10 இந்திய மீனவர்கள் மீதும் கடற்படை மாலுமி மரணம் தொடர்பாக லகொலை வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் கைது செய்த 10 இந்திய மீனவர்கள் மீது கொலை வழக்கு
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது, படகுகளை கைப்பற்றும் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட கடற்படை மாலுமி ஒருவரின் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாலுமி உயிரிழப்பு
கடற்படையின் கடற்படை சிறப்பு படகு படைப்பிரிவின் மாலுமி ஒருவர் "இந்திய விசைப்படகு பறிமுதல் செய்யப்படும் போது நிகழ்ந்த மோதலில் படுகாயமடைந்தார்" என்று இலங்கை கடற்படை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "படுகாயமடைந்த கடற்படை வீரர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.