உலக புள்ளியல் தினம்! கரோனா உயிரிழப்பு முதல் நாட்டின் பொருளாதாரம் வரை புள்ளியியல் துறையே ஆதாரம்!
இன்று (அக்டோபர் 20 ) உலகள் பள்ளியியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் முதலில் 20 அக்டோபர் 2010 அன்று ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. இது ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒரு முறை கொண்டாடப்படுகிறது.

சர்வதேச அளவில் பல நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இத்தகைய நாட்கள் கவலைக்குரிய பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு கல்வி கற்பிப்பதற்கும், உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசியல் விருப்பத்தையும் வளங்களையும் திரட்டுவதற்கும், மனிதகுலத்தின் சாதனைகளை கொண்டாடுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக உள்ளது. இந்த வரிசையில் இன்று (அக்டோபர் 20 ) உலகள் பள்ளியியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் முதலில் 20 அக்டோபர் 2010 அன்று ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. இது ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒரு முறை கொண்டாடப்படுகிறது.
வரலாறு
ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையம் பிப்ரவரி 2010 இல் அதன் 41வது அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, முதல் உலக புள்ளியியல் தினம் அக்டோபர் 20, 2010 அன்று கொண்டாடப்பட்டது. உலகளாவிய கொள்கைகளை வடிவமைப்பதிலும், நாடுகளின் நலனுக்காக பங்களிப்பதிலும் நம்பகமான தரவு மற்றும் புள்ளிவிவரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்த கொண்டாட்டம் நிகழ்கிறது, 2024 நிகழ்வு நான்காவது நிகழ்வைக் குறிக்கிறது.
புள்ளிவிவரத்தின் முக்கியத்துவம்
நாட்டின் அனைத்து விதமான வளர்ச்சியை கணக்கிடுவதற்கும், எதிர்மறையான நிகழ்வுகளின் போதும் புள்ளி விவரங்கள் பெரிதும் உதவுகின்றன. உதாரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார உயர்ந்துள்ளதா என கணக்கிடவும், நோய் அல்லது இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது அதன் பாதிப்பை கணக்கிடவும் புள்ளி விவரங்களே முதன்மையான ஆதராமாக உள்ளன.