Tuberculosis : வாவ் ஆய்வு – காசநோயை கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம் – மருத்துவத்தில் மற்றுமொரு மைல்கல்!
மும்பையில் உள்ள Qure.ai நிறுவன தயாரிப்பான செயற்கை நுண்ணறிவு qXR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காசநோய் கண்டறிவதை எக்ஸ்-ரே பதிவில் ஆராய்ந்தால் ஒரு நிமிடத்திற்குள் அதிகம் பேருக்கு காசநோய் இருப்பதை கண்டறிய முடியும் எனும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில், 2019-21ம் ஆண்டு செய்த ஆய்வில் எக்ஸ்-ரேவை பயன்படுத்தாமல் போனால், 43 சதவீதம் பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்படாமல்போனது ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.
காசநோயை ஆரம்பத்திலேயே எளிதில் கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மூலக்கூறு ஆய்வுகளை பயன்படுத்தினால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. காசநோய் ஒழிப்பில் ஆரம்பத்திலேயே நோயை கண்டறிவது மிக முக்கியம்.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் செயற்கை நுண்ணறிவு (qXR) மூலம் காசநோய் கண்டறிவதற்கு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் நோய் கண்டறியும் தேவைகளை செயற்கை நுண்ணறிவுத் திட்டம் (qXR) பூர்த்திசெய்துள்ளதால், உலக சுகாதார நிறுவனமும், 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.