தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Poverty In India : இந்தியாவில் அரசின் கூற்றுப்படி உண்மையில் வறுமை குறைந்து வருகிறதா? பொருளியல் நிபுணர்கள் கருத்து!

Poverty in India : இந்தியாவில் அரசின் கூற்றுப்படி உண்மையில் வறுமை குறைந்து வருகிறதா? பொருளியல் நிபுணர்கள் கருத்து!

Priyadarshini R HT Tamil
Nov 23, 2023 07:00 AM IST

Poverty in India : இந்தியாவில் அரசின் கூற்றுப்படி உண்மையில் வறுமை குறைந்து வருகிறதா? பொருளியல் நிபுணர்களின் கருத்து என்ன?

Poverty in India : இந்தியாவில் அரசின் கூற்றுப்படி உண்மையில் வறுமை குறைந்து வருகிறதா? பொருளியல் நிபுணர்கள் கருத்து!
Poverty in India : இந்தியாவில் அரசின் கூற்றுப்படி உண்மையில் வறுமை குறைந்து வருகிறதா? பொருளியல் நிபுணர்கள் கருத்து!

ட்ரெண்டிங் செய்திகள்

வறுமையை புரிந்துகொள்ள, முதலில் அது குறித்தான சரியான புள்ளி விவரங்களை திரட்ட வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் சூழலில், அதை சரியான அளவீடுகள் கொண்டு அளக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசோ, இதற்கு முன்னர் சத்துணவு ஒருவருக்கு கிடைக்கும் அளவை கணக்கில்கொண்டு, வறுமையை அளந்த நிலை மாறி, அது இல்லாமல் வறுமையை அளக்கும் (Multi-Dimensional Poverty Index-MDI) அவலம் நடந்தேறியுள்ளது. மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்த மட்டுமே நடந்துள்ளது என்றும், வீட்டுப் பயன்பாட்டு பொருட்களைக்கொண்டு, வறுமையை அளக்காமல், மனிதர்களின் அடிப்படைத் தேவையான சத்துணவு கிடைக்கும் அளவைக்கொண்டு அளவீடு செய்வது சிறப்பாக இருக்கும் என்பதை அரசு அறிந்திருந்தும், அதைக் கொண்டு வறுமையை அளக்காமல் இருப்பது எப்படி சரியாகும்? என உட்சா பட்நாயக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வறுமையை அளப்பதில், குடும்பம் ஒன்று, வரும் வருமானத்தைக் கொண்டு, வீட்டு வாடகை செலுத்தவும், பிற வீட்டு பயன்பாட்டு பொருட்களின் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளதா? என்பதும் இல்லாமல் இருப்பது வேதனையானது.

அரசின் வறுமைக் குறைப்பு என்பது சத்துணவை பல ஆண்டுகளாக கணக்கில்கொள்ளாமல் அளந்ததால், அது மிகைப்படுத்தப்பட்டு காட்சியளித்தாலும், உண்மையில் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் சூழலில், உலக நாடுகள் சத்துணவு கிடைப்பதை வறுமைக்கோடு அளவீடுகளில் பயன்படுத்தினாலும், இந்திய அரசு அதை கணக்கில்கொள்ளாமல் இருப்பது, உண்மையான வறுமையை குறைத்து காண்பிக்க உதவி, வறுமை ஒழிப்புத் திட்டங்களில் பின்னடைவையே ஏற்படுத்தும் என திபா சின்கா எனும் பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.

சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் காரணிகளை கண்டறிந்து நீக்காமலும், மக்களின் வாழ்வாதாரம், சுற்றுப்புற தூய்மையை, அடிப்படை தரமான சுகாதார சேவை, பெண்களுக்கான அதிகாரம் போன்றவற்றை மேம்படுத்தாமல், நாம் வறுமையிலிருந்து மீண்டு "வளர்ச்சி"பெற்றதாகக் கருதுவது சரியான போக்கல்ல என்றும் திபா சின்கா எச்சரித்துள்ளார்.

மேலும் அவர், பொருளாதார ஆய்வுகளில் கூலி கொடுக்கப்படாத பெண்களின் உழைப்பு பற்றி போதிய அக்கறை இல்லாமல் இருப்பதையும், ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகிறார்.

உண்மையாகவே, வறுமையை ஒழிக்க சரியான தீர்வுகளையும் உட்சா பட்நாயக் முன்வைக்கிறார்.

இந்திய GDPயின் பத்தில் ஒரு பங்கைக் கொண்டு, ஏற்றத்தாழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கான சரிவிகித சத்துணவு, அடிப்படை மற்றும் தேவையான சுகாதார வசதி, கட்டாயக்கல்வி, வயதானவர்களுக்கு பென்சன் தொகை போன்றவற்றை எளிதில் நிறைவேற்ற முடியும் என்றும், அதற்கான நிதியை GDPயில் 7 சதவீத வரியை பணக்காரர்களிடம் இருந்து பெற்று, சமூக ஏற்றத்தாழ்வுகளை எளிதில் களைய முடியும் என்றும் அரசிற்கு தீர்வை கொடுக்கும் வகையில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசு அனைத்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அதை நடைமுறைப்படுத்த முன்வருமா என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்