கருத்தடை சாதனம் அணியாமல் இணைந்தால் கருத்தரிக்காமல் இருக்க 'சேப்டி' நாட்கள் உண்டா
பாதுகாப்பாற்ற முறையில் உறவு கொண்டால் கருத்தரிக்காமல் தவிர்க்க முடியுமா என பெரும்பாலான தம்பதியருக்கு உள்ள சந்தேகத்துக்கான விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம்.
கருத்தடை சாதனம் அணியாமல் உறவுகொண்டால் கருத்தரிக்காமல் இருக்க 'சேப்டி' நாட்கள் உண்டா என்பதை அறிய தம்பதியருக்குள் பெரும் ஆவல் இருப்பதைக் காண முடிகிறது. தேவையற்ற கருத்தரிப்பு, ஆணுறை, பெண்ணுறை போன்ற கருத்தடை சாதனங்களுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது முழு அளவு திருப்தி கிடைக்காததன் காரணம் தான் இது.
இல்லறத்துக்கு நல்லறம் இனிய தாம்பத்தியம். தாம்பத்தியம் சிறக்க வேண்டுமென்றால் ஈடுபாட்டோடு கூடிய உறவாகும். எங்கே தேவையில்லாமல் கருத்தரித்து விடுவோமோ என்ற அச்சத்துடனே இதில் ஈடுபட்டால் தாம்பத்தியம் இனிக்காது. எனவே உறவு கொண்டாலும் கருத்தரிக்காமல் இருக்கும் பாதுகாப்பான நாட்கள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள தம்பதியர் முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் மாதவிடாய் முடிந்து முதல் 1-7 நாட்கள் கிட்டத்தட்ட பாதுகாப்பான நாட்கள் எனலாம். 8ஆவது நாளில் இருந்து 19ஆவது நாள் வரை பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் வாய்ப்பிருப்பதால் அப்போது பாதுகாப்பாற்ற உறவு உசிதமல்ல. எனவே அந்த நாட்களில் கருத்தடை சாதனங்கள் அணியாத உறவை அல்லது கருத்தரிப்பை தவிர்க்க உறவு கொள்வதையே தவிர்க்க வேண்டும்.
