வாயுத்தொல்லை, அஜீரணத்தை போக்கும் செட்டிநாடு நாட்டுப்பூண்டு குழம்பு!
Healthy Diet: வாயுத்தொல்லை, அஜீரணத்தை விரட்டியடிக்கும் செட்டிநாடு நாட்டுப்பூண்டு குழம்பு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

செட்டிநாடு நாட்டுப்பூண்டு குழம்பு
உடலில் செரிமானக் கோளாறு காரணமாக உண்டாகும் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், அஜீரணம்,எதுக்கலித்தல் போன்ற பிரச்னைகளுக்கு நாட்டுப்பூண்டு அருமருந்தாக விளங்குகிறது.
இந்தப் பூண்டை இரண்டு எடுத்து சுட்டு சாப்பிட்டால் போதும் அடுத்த சில நிமிடங்களிலேயே கலகலவென வாயு பிரிந்து விடும். செரிமானப் பிரச்னைகள் தீர்ந்து விடும். பச்சையாக ஐந்தாறு பற்கள் பூண்டை நறுக்கி வாயில்போட்டு தண்ணீர் குடித்து முழுங்கிவிட்டாலும் இதே நன்மைகள் உண்டு.
அப்படிப்பட்ட சிறப்பான நாட்டுப்பூண்டை வைத்து குழம்பு செய்தால் மிகச்சிறந்த ஆரோக்கியத்தைப் பெறலாம்.