Cloves Syndrome Awareness Day : திசுக்கள் அதிகமாகும் மரபணு கோளாறு நோய் விழிப்புணர்வு நாள், வரலாறு, முக்கியத்துவம்!
Cloves Syndrome Awareness Day : திசுக்கள் அதிகமாகும் அரிய மரபணு கோளாறு நோய் விழிப்புணர்வு நாள், வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் அரிதான மரபணு கோளாறு ஆகும். இந்நோய் பாதித்தவர்களுக்கு உடலில் உள்ள திசுக்கள் அபிரிமிதமாக வளரச்செய்யும். இந்நோய் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் மற்றும் இதனால் வாழ்க்கைத்தரம் என்னவாகும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3ம் தேதி க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அரிதான மரபணு கோளாறால் ஏற்படும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம் ஆகும். உலகம் முழுவதும் ஒன்றிணைந்து இந்நோய் பாதித்தவர்களுக்கு ஆதரவை வழங்குவது இந்த நாளில் செய்யக்கூடிய செயலாகும்.
க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?
க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் என்பது கான்ஜெனிட்டல் லிப்போமெட்டசின் அதிகப்படியாக வளர்வது, வாஸ்குலர் தவறாக வடிவமைந்துவிடுவது, எப்பிடெர்மல் நெவி, எலும்பு மண்டல குறைபாடு ஆகும். இது ஒரு வகை அரிய மரபணுக்கள் கோளாறு ஆகும்.