Hypertension: உயர் இரத்த அழுத்தம் எனும் ‘சைலண்ட் கில்லர்’.. இப்படி கையாளுங்க.. - மருத்துவர் பேட்டி!
சின்ன சின்ன மாற்றங்களை மேற்கொள்ளும் பட்சத்திலேயே நாம் இதனை வெற்றிகரமாக கையாள முடியும்.

உயர் இரத்த அழுத்தம் என்பது இன்று உலகம் முழுவதும் மக்கள் இறப்பிற்கான பிரதான காரணமாக இருக்கிறது. தகவல்களின் படி உயர் இரத்த அழுத்ததின் மொத்த பாதிப்பு 30 சதவீதம் என சொல்லப்படும் நிலையில், 46 சதவீத இளைஞர்களுக்கு இது குறித்தான போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது.
வயது முதிர்ச்சி, அதிக எடை, அதிகமாக மது அருந்துதல், சத்தில்லாத உணவுகளை சாப்பிடுதல், நீரிழிவு நோய், அதிகமாக உப்பு எடுத்துக்கொள்ளுதல் உள்ளிட்டவை உயர் இரத்த அழுத்ததிற்கான காரணிகளாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அதிகப்படியான மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் என்பது எந்தவிதமான அறிகுறிகளுமே இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து இதய நோய் நிபுணரும் மருத்துவருமான பிரியா ஹிந்துதாஸ்தான் டைம்ஸ் ஆங்கிலத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, “ உயர் இரத்த அழுத்தம் என்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.