Marumagal Serial: சிவபிரகாசம் வைத்த சீனி வெடி; அணுகுண்டாய் வெடித்த மனோகரி;பந்தாடும் பத்திரம்! - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: அவளுடைய பிள்ளைகள் அவளிடம் சண்டைக்குச் செல்ல, மனோகரி கையை நீட்டி மகளை அடித்து விட்டாள். இதைப்பார்த்த ஆதிரை தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள். - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: மருமகள் சீரியல் தொடர்பாக இன்று வெளியாகியிருக்கும் புரோமோவில், ஏகாம்பரத்தின் மனைவியான மணிமேகலை பிரபு குடும்பத்தை சந்தித்து கல்யாணத்திற்கான பணத்தை தான் தருவதாக கூறினாள். ஆனால் அதைக் கேட்ட தில்லை. அதெல்லாம் வேண்டாம். இந்த விஷயம்ஏகாம்பரத்திற்கோ அல்லது பிரபுவுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, பிரபு தன்னுடைய நண்பனான சாமி உடன் அங்கு வந்து நின்றான். அவனைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து எழுந்து நின்றனர்
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில், சிவப்பிரகாசம் கல்யாணத்தை ஆடம்பரமாக, லட்சங்களை செலவழித்து, நடத்த வேண்டும் என்று கூறிவிட்டு சென்ற நிலையில், அதை நினைத்து மயங்கினான் பிரபு. இதையடுத்து அனைவரும் தண்ணீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். இதையடுத்து எழுந்த அவன், எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம். கல்யாணத்திற்காக அவ்வளவு ரூபாயெல்லாம் செலவழிக்க முடியாது என்றான்.