“அவ்வளவு அழுத்தம்.. அப்பா இதனால்தான் இறந்து போனார்” -மேடையில் ஓப்பனாக போட்டுடைத்த சிவகார்த்திகேயன்
‘அமரன்’ திரைப்படத்தின் புரோமோஷனில் தன்னுடைய அப்பா இறந்த காரணத்தை சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.

“அவ்வளவு அழுத்தம்.. அப்பா இதனால்தான் இறந்து போனார்” -மேடையில் ஓப்பனாக போட்டுடைத்த சிவகார்த்திகேயன்!
‘அமரன்’ படத்தில் இடம் பெற்ற முகுந்த் கதாபாத்திரத்திற்கும், தன்னுடைய அப்பாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.
அப்பா இருக்கிறார்.
இது குறித்து பேசும் போது, “இந்தக்கதையை கேட்கும் பொழுது முகுந்திற்கும், என்னுடைய அப்பாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. படம் வந்ததற்குப் பிறகு அது எந்தெந்த இடங்கள் என்பதை என்னால் சொல்ல முடியும் இப்போது அதை என்னால் சொல்ல முடியாது. அதுவும் இந்தப்படத்தை செய்வதற்கான முக்கியமான காரணம் என்று சொல்லலாம்.


