தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Singer Vaikkam Vijayalakshmi Accuse Her Husband Torturing Like A Psycho

கணவர் சைக்கோத்தனமாக துன்புறுத்துவதாக பாடகி வைக்கம் விஜயலட்சுமி கண்ணீர்

I Jayachandran HT Tamil
Dec 06, 2022 10:24 PM IST

கணவர் சைக்கோ போலத் துன்புறுத்துவதாகவும், கொடுமைகள் செய்வதாகவும் பாடகி வைக்கம் விஜயலட்சுமி உருக்கமாகக் கூறியுள்ளார்.

பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் பார்வையிழந்த மாற்றுத்திறனாளியாவார்.

வைக்கம் விஜயலட்சுமி.பின்னர் சொப்பன சுந்தரி நான் தானே" என்ற பாடல் மூலம் பிரபலமானார். அதற்கு முன் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த செல்லுலாய்டு என்கிற படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமிக்கு.

இந்நிலையில் கடந்த 2016ல் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன்பிறகு அந்த மணமகன் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாகக் கூறி அந்த திருமணமே வேண்டாம் என நிறுத்தினார்.

பின்னர் கடந்த 2018ல் இன்டீரியர் டெகரேடரும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டுமான அனூப் என்பவரை விஜயலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் நடைபெற்ற சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து செய்ய இருவரும் முடிவெடுத்தனர்.

இந்நிலையில் பிரபல செய்தி ஊடகத்தில் ஒளிபரப்பாகும் "மனிதி வா" என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயலட்சுமி கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை நடிகை கௌதமி நடத்தி கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி தன்னுடைய மணவாழ்க்கையில் நடந்த கொடுமைகளைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- என்னை திருமணம் செய்தவர் கொடுமைக்காரர். நாளாக நாளாக அதை புரிந்து கொண்டேன்.

எனக்கு பாடல்கள்தான் முதல் சாய்ஸ். பாடக்கூடாது என்று கணவர் நிர்பந்தம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனது சந்தேஷத்துக்குக் காரணமான பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்த நான் விரும்பவில்லை. உங்களுக்கு பல்வலி என்றால் அதை பொறுத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அதுவே ஒரு அளவுக்கு அதிகமானால் அந்தப் பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லை. என்றார்.

IPL_Entry_Point