Suchitra: காமம் இருக்கு.. வா பரிசு தரேன்.. பாட்டியுடன் சென்ற சுசித்ராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Suchitra: ”உன் குரலில் காமம் இருக்குமா.. உன் குரல் மேல எனக்கு காதல் வருது” என வைரமுத்து தன்னிடம் பேசியதாக பாடகி சுசித்ரா பேட்டி அளித்து உள்ளார்.

Suchitra: மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டல்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்களை சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை சுட்டிகாட்டியது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவிலும் இது போன்ற ஒரு கமிட்டி உருவாக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக ராதிகா சரத்குமார், செளமியா, விசித்ரா, ஷகிலா உள்ளிட்டோர் குரல் கொடுத்து இருக்கிறார்கள்.
இதனிடையே இந்த விவாகரம் தொடர்பாக பேசி இருக்கும் சுசித்ரா, ” ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பிறகு பலரும் குரல் கொடுக்கிறார்கள். ஏன் சின்மயி தனியாக போராடினார். அப்போது ஏன் யாரும் வாய் திறக்கவில்லை. தனி நபராக அவர் போராடியதற்கு கிடைத்த பரிசு, மறுக்கப்பட்ட வாய்ப்பு. ஆனாலும் அவர் தன் முடிவில் தீர்க்கமாக தான் இருந்தார்.