Singappenne: மகேஷிடம் உதவி கேட்ட ஆனந்தி.. மீண்டும் வருவாரா அன்பு? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne: மகேஷிடம் உதவி கேட்ட ஆனந்தி.. மீண்டும் வருவாரா அன்பு? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Singappenne: மகேஷிடம் உதவி கேட்ட ஆனந்தி.. மீண்டும் வருவாரா அன்பு? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Aarthi Balaji HT Tamil
Published Oct 04, 2024 11:02 AM IST

Singappenne: ஜெயந்தி, சௌந்தர்யா, முத்துவிடம், “ யார் சொன்னால் அன்பு வருவார் என்று எனக்கு தெரியும். மகேஷ் சார் பேசுவாரு “ என்று அதிர்ச்சி கொடுத்தார் ஆனந்தி.

Singappenne: மகேஷிடம் உதவி கேட்ட ஆனந்தி.. மீண்டும் வருவாரா அன்பு? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Singappenne: மகேஷிடம் உதவி கேட்ட ஆனந்தி.. மீண்டும் வருவாரா அன்பு? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மித்ராவிடன், காயத்ரி, “ லோன் பணம் செலுத்த எப்படியும் பணம் கிடைத்துவிடும் அல்லவா ? “ என கேள்வி கேட்கிறார். அதற்கு மித்ரா, “ பண விஷயத்தை பற்றி நீ கவலைப்பட வேண்டாம், நான் பார்த்து கொள்கிறேன் “ என்றார். அதை மேல் இருந்து ஆனந்தி பார்த்துவிடுகிறார். எதனால் மித்ராவிடம், காயத்ரி பேசி கொண்டு இருக்கிறார் என யோசிக்கிறார். 

அதிர்ச்சி அடைந்த மகேஷ்

மறுபக்கம் மகேஷுக்கு நிறைய லெட்டர் வந்து இருக்கிறது. அதை பாதுகாவலர் வந்து கொடுக்கிறார். வழக்கம் போல் அதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து அவர் சென்றார். உடனே அவர், ” ஆனந்தி உங்களிடம் கொடுக்க சொல்லி கொடுத்தார் ” என்றார். உடனே அதிர்ச்சி அடைந்து அதை வாங்கி கொண்டார் மகேஷ். 

அன்பு என்ன சொன்னாலும் வேலைக்கு வர மாட்டேன் என்ற பிடியில் இருக்கிறார். அதனால் அவரை வர வைக்க வேண்டும், என்ற எண்ணத்தில் இருக்கிறார், அன்பு. ஜெயந்தி, சௌந்தர்யா, முத்துவிடம், “ யார் சொன்னால் அன்பு வருவார் என்று எனக்கு தெரியும். மகேஷ் சார் பேசுவாரு “ என்று அதிர்ச்சி கொடுத்தார் ஆனந்தி. 

இது தொடர்பான காட்சிகள் இன்றைய ( அக். 4 ) எபிசோடில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

நேற்றைய எபிசோட்

சிங்கப் பெண்ணே சீரியலின் நேற்றைய ( அக். 3 ) எபிசோடில்,அன்புவிடம், “ ஜெயந்தி மற்றும் சௌந்தர்யா, நாங்க இரண்டு பேர் மட்டும் இல்லாமல் ஆனந்தியுடன் உன்னிடம் பேச வந்து இருக்கிறார் என அன்புவிடம் “ சொல்கிறார். அதற்கு அன்பு அதிர்ச்சி அடைந்து என்னது ஆனந்தியும் இங்கே வந்து இருக்கிறாளா? என கேட்டார். அதை அன்புவின் அம்மா கேட்டுவிட்டு கடுப்பாகினார்.

காயத்ரிக்கு உதவி செய்யும் மித்ரா

லோன் பணம் கட்ட முடியாமல் தவிக்கும் காயத்ரியின் விஷயம் எப்படியோ மித்ராவுக்கு தெரிந்து போனது. அதனால் அவரிடம் உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் நான் கொடுக்கிறேன் என்றார்.

ஆனந்தி வந்து இருப்பதை அறிந்து அன்பு வீட்டிற்கு வெளியே சென்று பேசுகிறார். ஆனந்தி, “ நீங்க தயவு செய்து மீண்டும் வேலைக்கு வந்துடுங்க அன்பு “ என்றார். அன்பு, “ இங்க வந்து எதற்காக நீங்க கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க. போய் உங்க வேலையை பாருங்க “ என மிகவும் கோபமாக பேசிவிட்டார். இதனால் ஆனந்தியின் மனம் மிகவும் உடைந்துவிட்டது.