அன்பு பெட்ரூமில் ஆனந்தி; தொக்காக தூக்கி தங்கை.. வீட்டிற்குள் ஊசலாடும் காதல்! - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி, இன்னும் மூன்று நாட்கள் அன்பு வீட்டில் தங்குவது போன்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!

சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில், “சிதம்பரம் ஆனந்தியை ஊருக்கு வந்து விடக்கூடாதா என்று கேட்க, இங்கு வேலை அதிகமாக இருக்கிறது வரமுடியாது அப்பா என்று கூறுகிறாள். இன்னொரு பக்கம் ஆனந்திக்கு சப்போர்ட்டாக நிற்கும் மகேசை, அவளிடம் இருந்து பிரிக்க, தான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்று மகேஷின் அம்மா சூளுரைத்தாள். இதைக்கேட்டு பவித்ரா சந்தோஷப்படுகிறாள். மற்றொரு பக்கம் அன்பு வீட்டில் ஆனந்தி இருப்பதை கண்டுபிடித்த அன்புவின் தங்கை, இன்னும் மூன்று நாட்கள் அவள் நம் வீட்டில் தான் இருக்க வேண்டுமா என்று அதிர்ச்சியோடு கேட்கிறாள்.” தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
சிங்கப்பெண்ணே சீரியலில் நேற்றைய தினம், ஆனந்தி அன்பு வீட்டில், அவனது ரூமில் இருந்த நிலையில், திடீரென்று ஆனந்தி குளித்துக் கொண்டிருந்த அன்புவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாள். இதனையடுத்து அவன் என்ன ஆனது என்று கேட்க, அவள் தன்னுடைய பச்சை கலர் ஜாக்கெட்டை காணவில்லை என்று சொல்ல, அன்புவின் அம்மா கையில் அந்த ஜாக்கெட் இருப்பது தெரியவந்தது