Singapenne Serial: மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை.. உடைந்து போன அன்புவின் காதல் - இனி என்ன நடக்குமோ?
கோயில் நகைகள் திருடு போனதற்கு முழு பழியும் ஆனந்தி மற்றும் அவரது தந்தை மீது விழுந்திருக்கிறது. எப்படியாவது தங்கள் மேல் விழுந்த கலங்கத்தை போக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார் ஆனந்தி.
Singapenne Serial: இன்றைய ப்ரோமோ
சிங்கப் பெண்ணே சீரியலில் இருந்து இன்று ( ஆகஸ்ட் 30 ) இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது.
முதலில், ஆனந்தியை காணவில்லை என்பதால் அன்பு மற்றும் மகேஷ் காட்டு பக்கம் அவரை தேடிச் சென்றார். அந்த மூன்று திருடர்களுடன் சண்டையிடும் போது ஒருவர் மட்டும் ஆனந்தியை உயிருடன் புதைத்து இருப்பதை அன்பு விடம் சொல்லிவிட்டார். உடனே இந்த விஷயத்தை அன்பு ஓடிச் சென்று மகேஷிடம் கூறினார். அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஆனந்தியின் அதிரடி
இதை சற்றும் எதிர்பார்க்காத மகேஷ், ஆதங்கத்தில் தான் காதலிக்கும் பெண் வேறு யாருமில்லை ஆனந்தி தான் என்பதை முதல் முறையாக அன்பு விடம் சொல்லி கதறுகிறார். ஏற்கனவே அன்பு, அழகன் என்ற பெயரில் ஆனந்தியை தீவிரமாக காதலிப்பதால் அதிர்ச்சி அடைந்து நிற்பது போல் ப்ரோமொ முடிந்தது. மீதம் என்ன நடக்கும் என்பதை இன்றைய முழு எபிசோட்டில் பார்ம்த்து தெரிந்து கொள்வோம்.