‘நிற்க வைத்து திட்டிய தயாரிப்பாளர்: உடைந்து அழுத அஜித்’ காஜா மைதீன் ஷாக் தகவல்!
Anantha Poongatre: அஜித் உடல் நலம் பற்றி விசாரிக்க போனேன். அஜித் கையில் அந்த அட்டை படம். ‘ஜி, நான் திரும்ப வரமாட்டேன்னு நெனச்சுட்டீங்களா?’ என்று அஜித் கேட்டார். எனக்கு பயங்கர சங்கடம். அவருக்கு அதை விட சங்கடம்.

ஆனந்த்பூங்காற்றே படத்தில் அஜித் மற்றும் மீனா
90களில் பல முக்கிய சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் ரோஜா கம்பைன்ஸ் நிறுவனர் காஜா மைதீன். ஆனந்த பூங்காற்றே படத்தை தயாரித்த போதும், அஜித்தை அவர் முதலில் சந்தித்த போதும் நடந்தவற்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் காஜா மைதீன், இதோ அந்த பேட்டி:
முதல் படத்தில் நடிகர் கார்த்திக் உடன் மனஸ்தாபம் ஏற்பட்டது. இருந்தாலும், எங்களுக்குள்ளான உறவில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இதற்கிடையில் ராஜ்கபூர் சார் வந்து கதை இருக்கிறது என்றார். கதை கேட்டேன், ரொம்ப நல்லா இருந்தது. அது தான் ஆனந்தபூங்காற்றே.
‘சரி, தலைவா… யாரை வொச்சு பண்ணலாம்’ என்று கேட்டேன். அஜித் பெயரை ராஜ்கபூர் சொன்னார். அப்போது அஜித் ‘அப்கம்மிங் ஆக்டர்’. சரி என்று ரெண்டு பேரும் போய் பார்க்கலாம் என கிளம்பினோம்.