Paruthiveeran Sujatha; 'எல்லாம் மதுரை மயம்' பிறந்தநாளில் அறிவோம் சுஜாதாவை!
100 படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வரை சென்னையில் குடியேறாத சுஜாதாவிற்கு ஒரே ஒரு ஆசை முழு நீள காமெடி படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பதே அது...!

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் சமீபகாலங்களில் அதிகம் நடித்து வருபவர் சுஜாதா. கடந்த 2004ம் ஆண்டு நடிகர் கமல் ஹாசனின் விருமாண்டி திரைப்படத்தில் பேச்சியாக அறிமுகமானார். அதில் பெரிதாக பேசப்பட வில்லை. பின் 2007ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தில் பிரியாமணியின் அம்மாவாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது 100வது படத்தை நெருங்கி வந்தாலும் பருத்தி வீரன் சுஜாதா என்றே தன்னை திரையுலகில் இன்றளவும் அடையாளப்படுத்தி வருகிறார். பசங்க, களவாணி, சுந்தரபாண்டியன், சுறா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, விசுவாசம், கோலிசோடா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
சுஜாதா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன் குழந்தைகளுடன் இருப்பதே தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். இவருக்கு சுருதி பிரியா, சுபிக் ஷா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என்னதான் இவர் தன்னை பருத்தி வீரன் சுஜாதா என்று தன்னை அடையாளப்படுத்தி வந்தாலும் இன்று வரை பெரும்பாலான இணையதள ஊடகங்கள் இவரை சுஜாதா சிவக்குமார் என்றே அழைத்து வருகின்றன. உண்மை என்ன வென்றால் இவரது கணவர் பாலகிருஷ்ணன் அரசு பணியில் உள்ளார். இவரது தந்தை பெயரும் பாஸ்கரன் அப்படி இருக்கையில் சிவக்குமார் என்ற பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்றே தெரியவில்லை.
உண்மையில் சுஜாதா விருமாண்டி படத்தில் நடிகை அபிராமிக்கு மதுரை பேச்சு வழக்கை சொல்லிக் கொடுக்க வந்து இன்று அவரே சுமார் 100 ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.