மனம் முழுக்க வஞ்சம்.. கயலின் காதலுக்கு கெடு விதித்த சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்
கயல்- எழிலின் காதலை இன்னும் ஒரே வாரத்தில் முடித்துக் காட்டுவதாக சரவண வேலு சமதமிட்டிருக்கிறான்.

மனம் முழுக்க வஞ்சம்.. கயலின் காதலுக்கு கெடு விதித்த சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்
திருமணம் முடிந்த கையோடு கயல் தன் சொந்த ஊரில் உள்ள கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்க குடும்பத்துடன் செல்கிறாள்.
கயல் குடும்பத்திடம் சண்டையிடும் மக்கள்
அங்கு, அவரது தந்தை ஊரில் உள்ளவர்களின் பணத்தை ஏமாற்றி சென்றதாகவும், கயல் குடும்பம் உடனடியாக ஊரைவிட்டு வெளியே போக வேண்டும் எனவும் கூறி சண்டைக்கு வருகின்றனர். இதனால் என்ன செய்வது என அறியாமல் கயல் குடும்பம் தவித்து வந்தது. இந்த சமயத்தில் கயல் குடும்பம் ஊருக்கு வந்ததை அறிந்த சரவண வேலு, பல வருடங்களுக்குப் பின் ஊருக்கு வந்த கயலைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாார்.
சரவண வேலுவின் திட்டம்
ஆனால், கோயிலுக்கு சென்று பார்க்கும் போது தான் தெரிந்தது கயலுக்கு திருமணம் ஆனது. இதனால், ஒரு பக்கம் கோபமடைந்தாலும், முதலில் ஊர் மக்களிடம் இருந்து கயலை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஊரார் முன் கயல் குடும்பத்திற்காக பரிந்து பேசினார்.