Marumagal: ரூ.700க்கு நிச்சயதார்த்த புடவையா? - பிரபு சிக்கனத்திற்கு ஒரு அளவே இல்லையா பாஸ்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal: ரூ.700க்கு நிச்சயதார்த்த புடவையா? - பிரபு சிக்கனத்திற்கு ஒரு அளவே இல்லையா பாஸ்?

Marumagal: ரூ.700க்கு நிச்சயதார்த்த புடவையா? - பிரபு சிக்கனத்திற்கு ஒரு அளவே இல்லையா பாஸ்?

Aarthi Balaji HT Tamil
Published Aug 19, 2024 02:24 PM IST

Marumagal: அண்ணன் செய்வது தவறு என்று தம்பி ஒருவர் தான் தட்டிக் கேட்கிறார். “ யாராவது 700 ரூபாய்க்கு நிச்சயதார்த்த புடவை எடுப்பார்களா? பெண் வீட்டார் உன்னை என்ன நினைப்பார்கள்? என்று தைரியமாக கேள்வி கேட்கிறார்.

ரூ.700க்கு நிச்சயதார்த்த புடவையா? - பிரபு சிக்கனத்திற்கு ஒரு அளவே இல்லையா பாஸ்?
ரூ.700க்கு நிச்சயதார்த்த புடவையா? - பிரபு சிக்கனத்திற்கு ஒரு அளவே இல்லையா பாஸ்?

பிரபு தனது வருங்கால மனைவி ஆதிரைக்கு நிச்சயதார்த்த புடவை எடுத்து கொண்டு வந்து தனது தந்தையிடம் கொடுக்கிறார். 

அதற்கு அவரின் தந்தை, “ இந்த புடவையின் விலை என்ன? “ என்று கேட்க, அவர், “ பெருமையாக சிரித்து கொண்டே.. 700 ரூபாய் “ என சொன்னார். அனைவரும் அதிர்ச்சி அடைந்து ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்து கொள்கிறார்.

700 ரூபாய்க்கு புடவையா?

அண்ணன் செய்வது தவறு என்று தம்பி ஒருவர் தான் தட்டிக் கேட்கிறார். “ யாராவது 700 ரூபாய்க்கு நிச்சயதார்த்த புடவை எடுப்பார்களா? பெண் வீட்டார் உன்னை என்ன நினைப்பார்கள்? என்று தைரியமாக கேள்வி கேட்கிறார்.

தாய்யிடம் வம்பு செய்த வேல்விழி

மறுபக்கம் வேல்விழி தனது தாய்யிடம் வழக்கம் போல் வம்பு செய்கிறார். “ நாளைக்கு உங்க அக்கா பையன் பிரபுவிற்கு நிச்சயதார்த்தம் நடக்க போகிறது, அங்கு போக வேண்டும் என்று உங்க மனசு தவியாக தவிக்கிறது போல? ” என்று நக்கல் செய்கிறார். அதற்கு அவர், “ ஆமாம்.. நான் போக தான் போகிறேன் “ என்றார்.

ஆதிரை, பிரபுவிடம், “ நீங்க நிச்சயதார்த்த புடவை எடுத்துவிட்டதாக அப்பா சொன்னார். புடவை என்ன விலைக்கு எடுத்தீங்க?” என கேட்க, என்ன சொல்லி சாமளிப்பது என தெரியாமல் முழிகிறார். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.

ரசிகை கமெண்ட்

இதை பார்த்த ரசிகை, “ பிரபு நீங்க 700 கு புடவை எடுத்தீங்க னு ஆதிரை கு தெரிஞ்ச கல்யாணத்துக்கு முன்னாடியே டிவோர்ஸ் ஆய்டும் பிரபு சார். ” என கமெண்ட் செய்து உள்ளார்.

நேற்றைய எபிசோட்

மருமகள் சீரியலில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி, தில்லையின் மகள் ரோகிணி அக்கவின் நிச்சயதார்த்தப் புடவையை விலை அதிகமாக வாங்க வேண்டும் என தன் தந்தையிடம் கூறுகிறார்.

ஆடம்பரமான திருமணத்தை விரும்பும் ஆதிரை

மேலும் ஆதிரை, பிரபுவிடம் போனில் பேசும் போது, செலவைப் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரமாக திருமணம் செய்யவேண்டும் என்கிறார். தவிர, அதைக்கேட்டதும் அய்யய்யோ எனக் கதறுகிறார், பிரபு. 

பிரபுவின் நிச்சயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வேல்விழி மற்றும் அவர்து தந்தை படு பயங்கரமாக திட்டம் போட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.