நீடிக்காத கல்யாண சந்தோஷம்.. அன்பு மேல் விழும் பழி.. மூர்த்தியின் நிலை அறியும் கயல்.. இன்றைய எபிசோட்
அண்ணன் மூர்த்தி கத்திக்குத்து வாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கயலிற்கு தெரியவருகிறது.

நீடிக்காத கல்யாண சந்தோஷம்.. அன்பு மேல் விழும் பழி.. மூர்த்தியின் நிலை அறியும் கயல்.. இன்றைய எபிசோட்
திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்ததில் இருந்து, கயல் அண்ணன் மூர்த்தி குறித்து விசாரித்து வந்த வண்ணமாகவே இருந்தார். மூர்த்தி கத்திக்குத்து வாங்கியது பற்றி யாருக்கும் தெரியாததால், அவர்கள் கயலை சமாளித்து வந்தனர்.
உண்மை அறியும் கயல்
இந்த நிலையில், கயலுடன் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவருக்கு கத்திக்குத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் நபர் கயலின் அண்ணனாக இருக்குமோ என்ற சந்தேகம் அதிகரித்தது.
இதனால், அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்று, அனுமதிக்கப்பட்ட நபர் யார் என தெரிந்துகொள்ள முயல்கிறார். அங்கு சென்று பார்க்கையில், மருத்துவமனையில் கத்திக்குத்து பெற்று வலியால் துடித்து கொண்டிருப்பது கயலின் அண்ணன் மூர்த்தி தான் எனத் தெரிகிறது.