Kayal Serial: தீபிகா யார்? - எழிலுக்கு வந்த சந்தேகம் - கயலுக்கு கொடுத்த அதிர்ச்சி
Kayal Serial: ஆனந்தி சொன்னது போல் தீபிகா யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் எழில்.

கயல் சீரியல் இன்று
கயல் சீரியலின் இன்றைய ( செப் 12 ) எபிசோட்டிற்கான இரண்டு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. முதல் ப்ரோமோவில், எழில், கயல் வீட்டின் முன்பாக நின்று கொண்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வெளியே வா என்று சொல்லி அழைத்து செல்கிறார். நடு இரவில் வந்து எழில் எங்கே அழைத்து செல்கிறான் என்று தெரியாமல் குழப்பத்தில் செல்கிறார் கயல். கயல் கண்களை முடி ரொமண்டிக்காக சர்பரைஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுக்கிறார் எழில்.
அடுத்த ப்ரோமோவில் ஆனந்தி சொன்னது போல் தீபிகா யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் எழில்.
நேற்றைய எபிசோட்
கயல் சீரியலின் நேற்றைய ( செப் 11 ) எபிசோட்டில், கயல் கல்யாணத்தை நிறுத்துவதற்கான பேச்சில் வடிவும், தர்மலிங்கமும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை ராஜேஸ்வரி பார்த்துவிட்டாள். இதையடுத்து கொந்தளித்த அவள், ” நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா? ஒரு பெண்ணின் கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறீர்களே “ என்று கடிந்து கொண்டாள்.