Kayal Serial: கல்யாண வீட்டிற்குள் விவாகரத்து ஓலம்; கை கொடுக்காத மருதாணி; தீபிகா தீட்டிய திட்டம்! - கயல் சீரியலில் இன்று!
Kayal Serial: கயலோ இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது என்று சொல்லி சபதம் ஏற்று, காய்களை கனகச்சிதமாக நகர்த்துகிறார். - கயல் சீரியலில் இன்று!
Kayal Serial: கல்யாண வீட்டிற்குள் விவாகரத்து ஓலம்; கை கொடுக்காத மருதாணி; தீபிகா தீட்டிய திட்டம்! - கயல் சீரியலில் இன்று!
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியல் தொடர்பாக இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில், கயலுக்கும் எழிலுக்கும் நடக்கக்கூடிய திருமணத்தை தடுக்க நினைக்கும் எழிலின் அம்மாவும், தீபிகாவும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். ஆனால், கயலோ இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது என்று சொல்லி சபதம் ஏற்று, காய்களை கனகச்சிதமாக நகர்த்துகிறார். இந்த பிரச்சினைகளுக்கு இடையே கயலின் கல்யாணம் நடந்ததா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
கயல் சீரியலில் நேற்று நடந்தது என்ன?
கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில், கயலுக்கான கல்யாண வேலைகள் அனைத்தும் மும்மரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் தீபிகா, தன்னுடைய தோழிகளுடன் அங்கு வருகிறாள்