Salman Khan: மான் வேட்டை விவகாரம்; மன்னிப்புக்கேட்ட முன்னாள் காதலி; ‘மான கொன்னது சல்மான் அதனால அவன்தான்-பிஷ்னோய் சமூகம்
எங்கள் 29 விதிகளில் ஒன்று மன்னிப்பு என்பதால், அவரை மன்னிப்பது பற்றி எங்கள் சமூகம் சிந்திக்கலாம். இதுபோன்ற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றும், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பணியாற்றுவேன் என்றும் சல்மான் உறுதிமொழி எடுக்க வேண்டும் - பிஷ்னோய் சமூகம்

1998 பிளாக்பக் வழக்கு
கடந்த 1999ம் ஆண்டு ராஜஸ்தான் அருகே, ஹம் சாத் சாத் ஹைன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, சல்மான்கான் பிளாக்பக் என்ற அரிய வகை மானை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 2018ம் ஆண்டு சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், பிளாபக் மானை தங்கள் சமூகத்தின் புனித விலங்காக பார்க்கும் பிஷ்னோய் சமூகம், சல்மான் கான், தங்கள் மானை வேட்டையாடியதற்காக, தங்களின் கோயிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவரை கொல்வோம் என்றும் மிரட்டல் விடுத்திருந்தனர். தொடர்ந்து பல்வேறு கொலை முயற்சிகளையும் அவர்கள் அரங்கேற்றினர்.
ஆனால் சல்மான்கான் எதற்கும் காதுகொடுக்காமல் அவரது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சல்மான் கானின் முன்னாள் காதலியான சோமி சல்மான் கான் சார்பில் மன்னிப்புக்கேட்டார்.