Goundamani: அரசியல் நையாண்டி.. 8 மணிநேர டப்பிங்.. பஞ்சாய் பறந்த கவுண்டர்கள்.. ஆச்சரியத்தில் ஆழ்த்திய கவுண்டமணி!
'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும் - இயக்குநர்!

கவுண்டமணி!
சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகர் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமான இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இப்படம் விறுவிறுப்பாக வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
சென்னையில் உள்ள பரணி’ டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறாராம்.