HBD T.M.Krishna: ‘கர்நாடக இசையின் கலகக்காரன்’ டி.எம்.கிருஷ்ணா பிறந்தநாள் இன்று!
’’பொதுவாக கர்நாடக இசைகலைஞர்கள் அதிகம் பேசுவதில்லை. பேசினாலும் அதிகம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஆனால் இவர் விதிவிலக்கு’’- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
இசைக்கருவிகள் எழுப்பும் ஒலியில் கூட சாதியப்பாகுபாடு நிலவும் ஈராயிரம் ஆண்டு இந்திய சமூகத்தில், நூல் அளவு கூட இடம் தராத சபாக்களில் அமர்ந்து சாதியப்பாகுப்பாட்டை பாடிய கலக்குரல் டி.எம்.கிருஷ்ணாவின் உடையது.
1976 ஜனவரி 22ஆம் தேதி பிறந்த டி.எம்.கிருஷ்ணாவின் தந்தை டி.எம்.ரங்காச்சாரி ஒரு தொழிலதிபர், இவரது தாய் பிரேமா கலாபீடம் எனும் பெயரில் இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். தனது ஆரம்பகால இசையை சீதாராம சர்மாவிடம் பெற்ற கிருஷ்ணா, பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதன் மற்றும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம் இசையை கற்றுத்தேர்ந்தார்.
90-களின் தொடக்கம் அவரது இசைப்பயணத்தில் அற்புதமான தொடக்கமாக அமைந்தது, ஆண்டுகள் கூடக்கூட அவரின் இசைப்பரிமானங்களும் கூடிக்கொண்டே சென்றது. ஒரு இசைக்கலைஞன் என்ற அடையாளத்திற்குள் மட்டும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல், எழுத்தாளராகவும் சமூக ஆராய்ச்சியாளராகவும் பரிணமித்து சமூக அக்கறையை வெளிப்படுத்தியது பலரின் கவனத்தை ஈர்த்தது.