தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: நீதிபதியிடம் முறையிட்ட ஈஸ்வரி.. குணசேகரன் நிலைமை என்ன? திருமணம் நடக்குமா?

Ethirneechal: நீதிபதியிடம் முறையிட்ட ஈஸ்வரி.. குணசேகரன் நிலைமை என்ன? திருமணம் நடக்குமா?

Aarthi Balaji HT Tamil
Mar 23, 2024 01:07 PM IST

Ethirneechal Serial: மறுபக்கம் குணசேகரன், என் பிள்ளையை திருமணம் செய்ய போகும் உங்கள் மாப்பிள்ளைக்கு என் சொத்தில், பாதி தருகிறேன் என மதுரை மீனாட்சி அம்மான் முன்பு நின்று சத்தியம் செய்து கொடுக்கிறார்.

ஈஸ்வரி
ஈஸ்வரி

ட்ரெண்டிங் செய்திகள்

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ( மார்ச் 22 ) சக்தி, அஞ்சனா, ஜனனி ஆகியோர் சித்தார்த் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை கேட்கிறார்கள். அதற்கு அவரின் தாய் உங்கள் தகுதி என்ன எங்கள் தகுதி என்ன? வெளியே போ! என வழக்கம் போல் தன் மிரட்டல்களை எடுத்துவிடுகிறார்.

மேலும் வீட்டிற்கு வந்த ஜனனி, சக்தி நேராக குணசேகரனிடம் செல்கிறார்கள். அஞ்சனா, சித்தார்த் காதலிப்பதால் இந்த திருமணம் நடக்காது. கனவு காண்வதை நிறுத்து கொள்ள வேண்டும் என சண்டை போடுகிறார்கள். ஆனால் வழக்கம் போல் குணசேகரன் அதற்கு எல்லாம் மசீயும் நபரா என்ன? யாரை வேண்டாலும் என்ன வேண்டுமானலும் செய்யட்டும், என் மகளுக்கு 

இந்நிலையில் எதிர்நீச்சல், சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

வழக்கறிஞரிடம் ஈஸ்வரி சென்று, 17 வயது குழந்தைக்கு திருமணம் செய்ய முயன்று இருக்கிறார் குணசேகரன் என்று புகார் கொடுக்கிறார். உடனே வழக்கறிஞர் என்னது கல்யாணமா, என்று அதிர்ச்சி அடைந்தார்.

மறுபக்கம் சக்தி, அஞ்சனா, ஜனனி ஆகியோர் சாலையில் நின்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது சக்தி, அஞ்சனாவிடம் இங்கு இவ்வளவு பிரச்னை நடந்து இருக்கு. இதை பற்றி சித்தார்த் உன்னிடம் பேசினேனா? என கேள்வி கேட்டார். உடனே அதற்கு அஞ்சனா, இல்லை மாமா இன்னும் பேசவே இல்லை என சொல்கிறாள். 

மறுபக்கம் குணசேகரன், என் பிள்ளையை திருமணம் செய்ய போகும் உங்கள் மாப்பிள்ளைக்கு என் சொத்தில், பாதி தருகிறேன் என மதுரை மீனாட்சி அம்மான் முன்பு நின்று சத்தியம் செய்து கொடுக்கிறார். இதை அனைவரும் அதிர்ச்சியாக நின்று என்ன நடக்கிறது என பார்க்கிறார்கள். 

இப்படியாக இருக்க ஜீவாந்தம் கதி என்னவானது என்ன தெரியாமல் இருக்கிறது. அவரை தேடி சென்று ஈஸ்வரி கண்டு பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்