Ethirneechal Serial: அம்பலமான தில்லுமுல்லு தனம்.. அதிரடியாக கைதான குணசேகரன்.. இனி நடக்க போவது என்ன?
Ethirneechal Serial: அப்பத்தா இறப்பு, ஜீவானந்தம் மனைவி கொலை, தர்ஷினி கடத்தல் வழக்கு என அனைத்திலும் குணசேகரன் செய்தது ஆதாரத்துடன் தற்போது தெரியவந்து உள்ளது.

அம்பலமான தில்லுமுல்லு தனம்.. அதிரடியாக கைதான குணசேகரன்.. இனி நடக்க போவது என்ன?
Ethirneechal Serial: வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சீரியல் தான். அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் என்றால் அவ்வளவு இஷ்டம். காலை டிவி ஆன் செய்தால் இரவு வரை சன் தொலைக்காட்சியில் சீரியல் தான் ஓடும்.
பகல் சீரியல்களை விட இரவு சீரியல்
அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.
குணசேகரன் இறப்பு
அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.