வேட்டையன் படக்காட்சியை நீக்க கோரி காவல் நிலையத்தில் புகார்! அப்படி என்ன காட்சி !
ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் அரசுப்பள்ளி குறித்து சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதனை நீக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மஞ்சு வாரியார் ஆகியோர் நடிப்பில் ஜெய்பீம் பட இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் நடித்த வேட்டையன் திரைப்படம் நேற்று உலகு எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் அரசுப்பள்ளி குறித்து சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதனை நீக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் ரஜினி காந்த் மட்டுமின்றி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாளம் மட்டுமின்றி தென்னிந்தியாவையே தனது நடிப்பால் கலக்கிவரும் பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வேட்டையன் திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஜெய்பீம் பட இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து கதை குறித்தும், படம் பேசப்போக்கும் விசயங்கள் குறித்தும் சமூக வலைத் தளங்களில் அனல் பறக்க விவாதங்கள் நடந்து வருகின்றன.
படத்தில் சர்ச்சை காட்சி
இப்படத்தின் இயக்குநர் த. செ. ஞானவேலின் முதல் படமான ஜெய்பீம் படத்தில் சிறை கைதிகள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து வெளிப்படையாக காட்டப்பட்டிருந்தது. மேலும் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கபத்திருந்தது. இப்படம் குறித்தே பல சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் காட்சி குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.