Bayilvan: நடிகருடன் பேச்சு.. மனைவி மேல் வந்த சந்தேகம் - ஜெயம் ரவி விவாகரத்திற்கு இதுவும் காரணமா? - பயில்வான் குண்டு
Bayilvan: ஆர்த்தி அழகாக இருக்கும் நபர். அவரை நடிக்க வைக்க நிறைய இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் ஆர்த்தி நடிக்க மறுத்துவிட்டார். அவர் அழகு தான் ஜெயம் ரவிக்கு வந்த சந்தேகம் என்றார் பயில்வான்.

Bayilvan: ஜெயம் ரவி - ஆர்த்தியின் விவாகரத்து செய்திதான் இன்று டாக் ஆஃப் தி டவுணாக இருக்கிறது. அவர்கள் முன்னர் யூடியூப் சேனலுகளுக்கு கொஞ்சி குலாவி கொடுத்த பேட்டிகள் வைரலாகிக்கொண்டிருக்கின்றன. ஆளுக்கொரு திசையில் அவர்களின் விவாகரத்திற்கு இதுதான் காரணம் பேசத் தொடங்கிவிட்டார்கள். இது ஒன்றும் தமிழ் சினிமாவிற்கு புதிதான ஒன்றல்ல. ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகியோர் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆர்வ் மற்றும் அயான் என இரு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத் துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகத் துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், தன் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
கடினமான முடிவு
நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் “ என்றார்.