Samantha: விவாகரத்திற்கு அரசியல் காரணமா? - குண்டு போட்ட அமைச்சருக்கு நெத்தியடி பதில் கொடுத்த சமந்தா
Samantha: சினிமா பிரபலங்களின் வாழ்க்கையை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று நடிகை சமந்தா கேட்டுக் கொண்டார்.

நாக சைதன்யா - சமந்தா பிரிந்ததற்கு முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான் காரணம் என அமைச்சர் கொண்டா சுரேகா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கருத்தை ஹீரோ நாகார்ஜுனா ஏற்கனவே மறுத்துள்ளார். சினிமா பிரபலங்களின் வாழ்க்கையை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த சர்ச்சைக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.
அவர் வெளியீட்டு இருக்கும் பதிவில், " எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெண்ணாக இருப்பதற்கும், போராடுவதற்கும் நிறைய தைரியமும், வலிமையும் தேவை. இந்தப் பயணம் என்னை எப்படி மாற்றியது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். தயவு செய்து அதை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.