வீரவணக்கம்! போர் நினைவிடத்திற்கு சென்ற சாய்பல்லவி!அமரனுக்கு முன் இதை செய்ய விரும்பினேன்!
அமரன் படத்தில் நடித்துள்ள சாய்பல்லவி தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார். இது குறித்தான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அமரன் படத்தில் நடித்துள்ள சாய்பல்லவி தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார். இது குறித்தான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள படம் அமரன். இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படம் வரும் தீபாவளி அன்று அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில நாட்களாகவே படக் குழு கலந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடித்துள்ள நடிகை சாய் பல்லவி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு இடத்திற்கு சென்றுள்ளார்.
பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா
அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதனை அடுத்து நேற்று இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் மதுரை போன்ற பெரு நகரங்களில் உள்ள முதல் நாளுக்கான அனைத்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் நிரம்பியுள்ளது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.