Annamalai: அதிமுக-திமுக இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கும் பயம் வந்துவிட்டது - வேட்புமனு தாக்கல் செய்த அண்ணாமலை பேட்டி!
BJP: அதிமுக வேட்பாளர் தந்தை குறித்த கருத்துக்கு மன்னிப்பு கூற முடியாது அது என்னுடைய கருத்து. வேட்பாளரோடு எனது போட்டியல்ல தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கும் ஆதிக்க சக்தியோடு தான் எங்களது போட்டி.

அண்ணாமலை (கோப்புப்படம்) ( (ANI))
Annamalai : அதிமுக-திமுக இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கும் பயம் வந்துவிட்டது என வேட்புமனுவை தாக்கல் செய்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பொதுமக்களின் பேராதரவு மற்றும் அன்போடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளராக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது,
"பிரதமர் மோடி 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மூன்றாவது முறையாக பிரதமராவார் என்கிற நம்பிக்கை உள்ளது. அதில் கோவை மக்களின் குரலாக பாஜகவின் குரல் இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்.