Suriya Peyarchi: இந்த கிரகங்களின் சேர்க்கை அதிர்ஷ்டத்தைத் தருமா?
கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்த சூரிய பகவானால் நற்பலன்களைப் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
ஜோதிடத்தைப் பொருத்தவரை நவகிரகங்களில் மையமாகச் செயல்படுவது சூரிய பகவான். நவகிரகங்களின் பெயர்ச்சியை வைத்து ஒருவரின் கிரக பலன்கள் அமையும் என ஆன்மீகம் கூறுகிறது. சூரிய பகவானின் சஞ்சாரத்தைப் பொருத்து ஒவ்வொரு தமிழ் மாதமும் கணிக்கப்படுகிறது.
சூரிய பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கக் கூடிய காலமாக மாசி மாதம் திகழ்கிறது. பிப்ரவரி 13ஆம் தேதி தேர்ச்சி அடைந்த சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் மூலம் நல்ல பலன்களைப் பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
ஜோதிடத்தைப் பொருத்தவரை சூரிய பகவானும், சனிபகவானும் எதிரி கிரகங்களாகப் பார்க்கப்படுகின்றன. கும்ப ராசியில் சனிபகவான் ஆட்சி பெற்று விளங்குவதால், இந்த முறை சூரிய பகவானின் சஞ்சாரம் பெரிய நன்மையைத் தராது. ஆனால் இந்த மூன்று ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
மேஷ ராசி
சூரிய பகவான் 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பகவானுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். இது மங்களமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எந்த செயலிலும் அதிக நம்பிக்கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷப ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் நான்காம் வீட்டின் அதிபதியாகத் திகழ்கிறார். இந்த முறை பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் சனி பகவான் உடன் சேர்க்கை கொண்டுள்ளதால் தாமதமான செயல்கள் சுறுசுறுப்பாக நடக்கும். புதிய தொழிலில் நல்ல வரவேற்பு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகர ராசி
தற்போது உங்கள் ராசியில் ஏழரைச் சனி நடந்து கொண்டிருந்தாலும் தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனிபகவானும், சூரிய பகவானும் சேர்வதால் நிதிப் பற்றாக்குறை இருக்காது. உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்மறையான மாற்றங்களைத் தவிர்ப்பது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முயற்சி கட்டாயம் வெற்றியைத் தரும்.
டாபிக்ஸ்