Sani Peyarchi Palangal: முடிவுக்கு வரும் அர்தாஷ்டம சனி! விருச்சிகம் ராசிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!
Sani Peyarchi Palangal 2025: விருச்சிகம் ராசியில் சந்திரன் நீசம் பெறுவதால் இவர்களுக்கு இரக்க குணம் இயல்பாகவே இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். இவர்களுக்கு உடல் வலிமையை விட மனவலிமை கூடுதலாக இருக்கும்.

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ள நிலையில் விருச்சிகம் ராசிக்கார்கள் பெறப்போகும் நன்மைகளை தற்போது பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
சனி பகவானின் பண்புகள்
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும். சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார்.
முடிவுக்கு வரும் அர்தாஷ்டம சனி
விருச்சிகம் ராசிக்கு வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் முதல் அர்தாஷ்டம சனி முடிவுக்கு வருகின்றது. சனி பகவான் நின்ற இடம் விருத்தி, பார்த்த இடம் பாழ் என்று சொல்வார்கள். சனி பகவான் சஞ்சாரம் செய்யும் இடத்தில் அந்த வீட்டு ஆதிபத்தியத்தை பலம் பெற செய்வார். சனி பகவான் கொடுக்கும் செத்து அழியாத சொத்துக்களாக நிலைத்து இருக்கும். ஒருவரது சுய ஜாதகத்தில் சனி பகவான் வலுப்பெற்றவர்கள் நாடாளும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள்.