Guru Vagra Peyarchi 2024: ‘எதிரிகள் விலகி ஓடுவார்கள்!’ துலாம் ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்
Guru Vagra Peyarchi 2024: துலாம் ராசி அன்பர்களுக்கு எட்டாம் வீட்டில் குரு பகவான் உள்ளார். 6ஆம் வீட்டுக்கு உடைய குரு பகவான் 8ஆம் வீட்டில் மறைகிறார். இதனால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற நிலை உருவாகும்.

குரு பகவான் ஆனவர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை 119 நாட்கள் வக்ரம் பெற உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருக்கும்போது, ஜாதகர் சத்தியத்தின் பாதையில் செல்வார். கண்கள் மற்றும் முகத்தில் ஒரு பிரகாசமான தோற்றம் இருக்கும். ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார். இயற்கை சுபர் ஆக உள்ள குரு பகவான் பெருந்தன்மை குணத்திற்கு சொந்தக்காரர்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
துலாம் ராசியும் குரு பகவானும்!
துலாம் ராசி அன்பர்களுக்கு எட்டாம் வீட்டில் குரு பகவான் உள்ளார். 6ஆம் வீட்டுக்கு உடைய குரு பகவான் 8ஆம் வீட்டில் மறைகிறார். இதனால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற நிலை உருவாகும். கடன், நோய், எதிரி, வம்பு, வழக்குகள் ஆகிய பிரச்னைகள் தீரும். பெரும் கடன் சிக்கல்களில் இருந்தவர்களுக்கு கடன் தீரும். தூக்கம் வராத பிரச்னைகள் இருந்தவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். மனைவி, பிள்ளைகள் வழியில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் ஒழுக்கம், சுயமரியாதை, கௌரவத்தில் இருந்த பிரச்னைகள் தீரும்.கல்லீரல், பித்தப்பை, மூளை, ஈரல்களில் இருந்த நோய்கள் குணமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வீடு, வண்டி, வாகனம் உள்ளிட்ட சொத்துக்களை சேர்ப்பீர்கள். தடைப்பட்டு இருந்த வருமானம் மீண்டும் வரும்.
வழிபாடு
குரு பகவான் வழிபாடு வாழ்கையில் மேன்மையை தரும். திருச்செந்தூருக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் வெற்றியை ஏற்படுத்தி தரும். ஆலங்குடி, தென்குடி திட்டை, சென்னை திருவள்ளி தாயம், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள காயரோகணேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் அடுத்த அகரம் கோயில், சிவகங்கை பட்டமங்கலம் வெள்ளியங்கி குருஸ்தலம், சோழவந்தான் குருஸ்தலம், குருவித்துறை போன்ற குரு பகவானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்ய சங்கடங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும்.