Aadi Pradosham: ஆடி பிரதோஷம்.. ஞாயிற்றுக்கிழமை.. ராகு காலம் - சிவனின் பரிபூரண அருளை பெறும் நாள்!
ஆடி மாத பிரதோஷத்தின் சிறப்புகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

சிவபெருமானுக்கு உரிய நாளாகப் பிரதோஷம் கூறப்படுகிறது. மாதந்தோறும் பிரதோஷ நாள் வரும். பௌர்ணமிக்கு மூன்று நாள் முன்னதாகவும், அமாவாசைக்கு மூன்று நாள் முன்னதாகவும் வருவதே திரயோதசி. இதுவே பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
அந்த வகையில் வழிபாட்டிற்குச் சிறப்பு கூறிய மாதமாக விளங்கக் கூடிய ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் மேலும் சிறப்பாகும். ஒவ்வொரு பிரதோஷமும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அப்படி ஆடி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்த சுபநாளோடு சேர்ந்து பிரதோஷமும் வருகின்ற காரணத்தினால் இது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதோஷம் ராகு கால நேரத்தில் வருவதால் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.