தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kan Thirusti: கண் திருஷ்டி விலக இதோ வழி!

Kan Thirusti: கண் திருஷ்டி விலக இதோ வழி!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 08, 2022 05:02 PM IST

கண் திருஷ்டி விலகச் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இங்கே காண்போம்.

கண் திருஷ்டி
கண் திருஷ்டி

கல்லடி கூடப் படலாம் கண்ணடி படக்கூடாது என முன்னோர்கள் வாய்மொழியாகக் கூறுவது உண்டு. ஒருவரின் முன்னேற்றத்தைக் கண்டு மற்றவர்கள் பொறாமை கொள்வதே கண் திருஷ்டி எனக் கூறப்படுகிறது. 

எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் கண் திருஷ்டியை நீக்குவதற்கு சில எளிய பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. எதிர்மறை ஆற்றலை நம் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே காண்போம்.

பரிகாரம்

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில், சிறிது ஏலக்காய், கிராம்பு, மூன்று அல்லது நான்கு கற்பூரம் சேர்த்து எரிக்க வேண்டும். அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதனை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் காட்ட வேண்டும்.

இவை அனைத்தும் முழுமையாக இருந்த பிறகு அந்த சாம்பலை உங்கள் வீட்டின் தலை வாசலில் போட வேண்டும். மேலும் அந்த சாம்பலைத் தண்ணீரில் கலந்து வீட்டு வாசலில் தெளிக்க வேண்டும்.

இதனைப் பரிகாரமாக அவ்வப்போது நம் வீட்டில் செய்து வந்தால் எதிர்மறை எண்ணங்கள் விலகும் எனக் கூறப்படுகிறது. கண் திருஷ்டி விலகி நேர்மறை ஆற்றலும், தெய்வ சக்தியும் நம் வீட்டில் குடிகொள்ளும் என்பது ஐதீகம் ஆகும்.

WhatsApp channel