மகரம் ராசியை விட்டு விலகும் ஏழரை சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா? காத்து இருக்கும் சக்ரவர்த்தி வாழ்கை!
அடுத்து வர உள்ள 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த ஏழரை சனி பாதிப்புகள் முழுமையாக நிறைவடைகின்றது.

பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
அடுத்து வர உள்ள 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த ஏழரை சனி பாதிப்புகள் முழுமையாக நிறைவடைகின்றது. கும்பம் ராசிக்கு பாத சனியும், மீனம் ராசிக்கு ஜென்மசனியும், மேஷம் ராசிக்கு விரைய சனியும் தொடங்க உள்ளது.
மகரம் ராசியை விட்டு விலகும் ஏழரை சனி!
மகரம் ராசியை விட்டு சனி பகவான் முழுமையாக விலக போகிறார். உங்களுடைய ராசிநாதன் ஆக உள்ள சனி பகவான் ஆனவர். கொடுமை, பிரச்சனை, வேதனை, கஷ்டங்களை கொடுத்து உங்களை பெரிய அனுபவசாலி ஆக மாற்றி உள்ளார். இனி வரும் சவால்களை எதிர்கொண்டு வெற்றிகளை குவிப்பீர்கள்.
சனி பகவான் ஆனவர் உங்களுக்கு 2ஆம் இடமான கும்பத்தில் இருந்து மூன்றாம் இடமான மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவானுடைய பார்வை ஐந்தாம் இடம் ஆன சுக்கிர பகவான் வீட்டில் விழுகிறது. இது மிக நல்ல யோகத்தை உண்டாகும்.
ஐந்தாம் இடம் என்பது அறிவு, திறமை, உயர்வு ஆகியவற்றை குறிக்கின்றது. இதனால் உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்கள் அறிவையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வாய்ப்புகளை பெற்று வெற்றி அடைவீர்கள். விடா முயற்சியுடன் செயல்பட்டு காரியங்களில் ஆதாயம் பார்ப்பீர்கள்.
கடந்த கால மன வருத்தங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். கடந்த கால அனுபவங்களை கொண்டு கவனமாக செயல்படுவீர்கள். உங்களுடைய நிலை மாறும், தரம், தகுதி, அந்தஸ்து உயரும்.
பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தை சனி பகவான் பார்க்கிறார். இதனால் நினைத்தது எல்லாமே தானாக நடக்கும். புதிய தொழில் செழிக்கும். தொழிலில் லாபமும் அனுகூலமும் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தொழில் மற்றும் வியாபாரங்களை செய்வீர்கள். தொழில் மற்றும் பணியில் பணவரவு கிடக்கும். லாபம் பெருகி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கண்டிப்பாக கிடைக்கும். பணியிடத்தில் இருந்த தொய்வுகள் நீங்கும். பலருக்கு வேலை மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். இந்த கால கட்டங்களில் குறுக்கு வழி மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளில் செல்லக் கூடாது.
இந்த காலகட்டத்தில் பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடுவதாக இருந்தால் உங்கள் செல்வத்தை இழக்க நேரிடலாம் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் கௌரவ பதவிகள் தேடி வரும். ஆன்மீக செயல்பாடுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் தள்ளிப்போன பதவி உயர்வுகள் கிடைக்கும்.
தாய், தந்தை, சகோதர சகோதரிகளிடம் அன்புமழை பொழிவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உடலில் இருந்த நோய் பாதிப்புகள் அகலும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு இருந்த கஷ்டங்கள் தீரும். உங்களுக்கு ஏற்றார் போல் நற்பலன்கள் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
