தப்பி தவறி கூட இந்த 5 இடங்களில் துளசியை வளர்க்காதீங்க.. எந்த நேரங்களில் துளசியை தொட்டால் தொல்லை தொடரும் பாருங்க!
தினமும் துளசியை வழிபடும் வீட்டிற்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். மேலும் ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் துளசியின் நறுமணம் உடலில் சேர்ந்தால் ஆரோக்கியம் பெருகும். ஆனால், இது பகலில் மட்டுமே. மாலைக்குப் பிறகு துளசியைத் தொட்டால், லட்சுமி தேவி கோபப்படுவாள் என்பது நம்பிக்கை.

இந்து மதத்தில், துளசி செடி ஆன்மீக வளர்ச்சி, தூய்மை மற்றும் தெய்வீக அன்பின் புனித சின்னமாக கருதப்படுகிறது. லட்சுமி தேவியின் வடிவமாக துளசி கருதப்படுகிறது. இதன் சுத்திகரிப்பு பண்புகள் மற்றும் மருத்துவ குணங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. துளசி செடியை பக்தியுடன் தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு வளமும், பாதுகாப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. துளசியுடன் கூடிய வீட்டில் ஒருவருடைய மனம், உடல் மற்றும் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் என்பது நம்பிக்கை. துளசியை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு பாவங்கள் அழியும் என்பது நம்பிக்கை.
இது போன்ற போட்டோக்கள்
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
May 17, 2025 09:38 AMஇந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அற்புதங்கள் நடந்தே தீரும்.. கடன்களின் வலையில் இருந்து வெளியே வருவார்கள்!
May 17, 2025 07:19 AMதங்க பாதத்தில் சனி பகவான்.. எந்த 4 ராசிகளுக்கு பணத்தை கொட்டி கொடுப்பார் பாருங்க.. ஜாலியோ ஜாலிதான்!
May 17, 2025 07:00 AMகுரு - சூரியன்- சேர்க்கையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம்.. வீடு, வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு பாருங்க!
May 17, 2025 05:30 AM'தன்னம்பிக்கை முக்கியம்.. ஆசைகள் நிறைவேறுமா.. வெற்றி யாருக்கு' இன்று மே .17 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
தினமும் துளசியை வழிபடும் வீட்டிற்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். மேலும் ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் துளசியின் நறுமணம் உடலில் சேர்ந்தால் ஆரோக்கியம் பெருகும். ஆனால், இது பகலில் மட்டுமே. மாலைக்குப் பிறகு துளசியைத் தொட்டால், லட்சுமி தேவி கோபப்படுவாள் என்பது நம்பிக்கை. சாஸ்திரப்படி கூட மாலைக்குப் பிறகு துளசியைத் தொடுவது நல்லதல்ல. எனவே இரவில் துளசி செடியை தொடாதீர்கள். இந்து மதத்தில் துளசி மிகவும் மரியாதைக்குரிய தாவரமாகவும், போற்றுதலுக்குக்கு உரிய தாவரமாகவும் வணங்கப்படுகிறது. ஆனால் அத்தகைய புனிதமான துளசி செடியை நம் வீட்டில் குறிப்பிட்ட இடங்களில் வைக்கக்கூடாது. ஐந்து இடங்களில் துளசி செடி வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. துளசி செடியை இந்த 5 இடங்களில் எங்கு வைத்தாலும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எனவே துளசி செடியை தவறுதலாக கூட இந்த இடங்களில் வைக்க கூடாது.
குளியலறை
துளசியை குளியலறை அல்லது கழிப்பறைக்கு அருகில் கண்டிப்பாக வைக்கக்கூடாது. அதன் புனித இயல்பு தூய்மையற்றதாகிறது. இந்த இடம் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பாதுகாப்பையும் குறைதாது மதிப்பிடுவதற்கு சமம். அது மட்டுமின்றி அப்படிப்பட்ட இடத்தில் துளசி செடியை வைத்தால் லட்சுமி தேவியின் அருளை இழக்க நேரிடும். வீட்டில் பிரச்சனைகள் பணக்கஷ்டம் வரத் தொடங்கும் என்பது நம்பிக்கை.