Astro Tips : அரச மரத்தடியில் ஏன் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்.. எந்த நாளில் விளக்கேற்ற வேண்டும்? முக்கியத்துவம்!
Astro Tips : சனிக்கிழமையன்று அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷமாகும். கடுகு எண்ணெய் தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. உண்மையில், அரச மரம் சனி பகவானின் அடையாளமாக கருதப்படுகிறது.

Astro Tips : சனாதன தர்மத்தில் அரச மரம் மிகவும் புனிதமான மற்றும் தெய்வீக மரமாக கருதப்படுகிறது. அதனால்தான் இந்த மரத்தை எப்போதும் வழிபடுகிறார்கள். அரச மரம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் இருப்பிடம் என்று புராணங்கள் கூறுகின்றன.அரச மரம் அஸ்வத்த மரம் என்று அழைக்கப்படுகிறது. புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 08:03 AMபண விஷயத்தில் கவனம்.. புதன் ராசி மாற்றத்தால் யாருக்கு சிக்கல் பாருங்க.. உங்கள் ராசிக்கு என்ன தாக்கம்? விவரம் இதோ!
May 24, 2025 07:30 AMகிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து பணம் கொட்டும் புதன்.. கண் குளிர வாழ போகும் ராசிகள்!
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
அரச மரத்தில் மும்மூர்த்திகளும் அனைத்து தெய்வங்களும் வசிப்பதாக நம்பப்படுகிறது. மேலும் அரச மரத்தின் அடியில் முன்னோர்கள் வசிப்பதாகவும், அதனை சுற்றி வலம் வருவதால் அனைத்து விதமான பாவங்களும் நீங்குவதாகவும் நம்பப்படுகிறது. அரச மரத்தடியில் தீபம் ஏற்றுவது பலவகையில் நன்மை பயக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
அரச மரத்தடியில் தீபம் ஏற்றுவது தெய்வ வழிபாட்டாகக் கருதப்படுகிறது. இவ்வாறு தீபம் ஏற்றினால், லட்சுமி தேவி மகிழ்ச்சியை அளிப்பாள் என்பது நம்பிக்கை. அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வைப்பதன் மூலம் வாழ்க்கையில் பணத்துக்கும், உணவுக்கும் பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கை. குறிப்பாக மாலையில் அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் அமைதியடைந்து குடும்பத்தில் அமைதியான சூழல் அமையும் என்பது நம்பிக்கை.