பெரும்பாலான ஆண்களுக்குப் பேசுவதைக் காட்டிலும் கேட்கப் பிடிக்கும்
ஆண்கள் எத்தகைய கஷ்டங்களையும் சடாரென்று வெளியில் காட்டமாட்டார்கள். முகம் வாடியிருப்பதை வைத்து நாம் தான் கண்டுபிடிக்க
வேண்டும்
பெண்களைப் போல ஒரே நேரத்தில் ஆண்களால் பலவேலைகளை செய்யமுடியாது. ஆண்கள் ஒரே நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே கவனமாக செய்வார்கள்.
வெளிஉலகத்தை, நாட்டுநடப்பை அறிந்து
கொள்வதில் ஆண்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பர்
ஆண்கள் எந்த ஒரு செயலையும் ஒரு தடவைக்குப் பல தடவை ஆராய்ந்து நன்மை, தீமைகளை அறிந்து ஒரு முடிவை எடுப்பார்கள். அதனால் ஆண்கள் முடிவு எடுப்பதில் இயல்பாகவே தாமதம் ஏற்படும்.
ஆண்கள் பல தினங்களை மறந்துவிடுவார்கள். அதனால் திட்டும் வாங்குவார்கள்.
ஒவ்வொரு விஷயத்திலும் தனித்துவமாக இருக்க நினைப்பார்கள். மற்றவர்களுடன் பொருளாதார ரீதியாகவோ, கலாசார ரீதியாகவோ ஒப்பிட்டால் சுத்தமாகப் பிடிக்காது