காலையில்  வெறும் வயிற்றில் துளசி சாறு குடிப்பதால் கிடைக்கும்  நன்மைகள்!

By Pandeeswari Gurusamy
Apr 24, 2024

Hindustan Times
Tamil

காலையில் எழுந்ததும் அனைவரும் முதலில் நினைப்பது டீ குடிக்கலாமா? காபி குடிக்கலாமா?  இந்த நினைப்பு நமக்கு தானாகவே வந்து விடும். அதன் பிறகு தான் காலை உணவுக்கு என்ன செய்வது என்று யோசிப்பார்கள். முதலில் வெறும் வயிற்றில் துளசி இலைச் சாற்றைக் குடியுங்கள். 

ஆயுர்வேதத்தின் படி, இந்த துளசி இலை சாற்றை வெறும் வயிற்றில் குடித்தால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. துளசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.  துளசி இலைகளின் சாற்றை தினமும் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

துளசி இலைச்சாறு வெறும் வயிற்றில் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். இந்த இலைகளின் சாற்றில் அடாப்டோஜென்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். இந்த இலைகள் நரம்பு மண்டலத்தை தளர்த்தும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் மனமும் உடலும் ரிலாக்ஸ் ஆகும். அதனால் அழுத்தம் தானாகவே குறையும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் துளசி இலைச்சாறு குடிப்பது மிகவும் அவசியம். இவை கணைய செல்கள் சரியாக செயல்பட உதவுகின்றன. இன்சுலினை வெளியிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. துளசி இலையின் சாறு குடிப்பதால், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் விரைவில் ஜீரணமாகும்.

துளசி இலைச்சாறு தினமும் குடிப்பதால் உடலுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. பொதுவான இருமல் மற்றும் சளி தவிர்க்கப்படுகிறது. இந்த இலைகளின் சாறு குடிப்பதால், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளும் நீங்கும். பாக்டீரியா இல்லாமல் வாயை சுத்தம் செய்கிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராட வலிமை அளிக்கின்றன. எனவே துளசி இலையின் சாற்றை தினமும் குடித்து வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும். 

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இதனால் சருமம் பொலிவாக இருக்கும். முகத்தில் பருக்கள் மற்றும் கறைகள் வராமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் துளசி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, துளசி இலைகளின் சாற்றை தினமும் குடித்து வந்தால், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. சூடான கொதிக்கும் நீரில் துளசி இலைகளை சேர்த்து நீராவியை சுவாசித்தால் சளி விரைவில் குறையும். 

இந்த துளசி இலைகளை மென்று சாப்பிடுவது அல்லது துளசி இலைகளின் சாறு அருந்துவது, உடலில் புற்றுநோய்கள் சேர்வதை தடுக்கிறது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. 

குறிப்பாக வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கும் சக்தி துளசி இலைகளுக்கு உள்ளது.