புதுமணத்தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க செய்யவேண்டியது என்ன?

By Marimuthu M
Jan 05, 2025

Hindustan Times
Tamil

 கணவன் - மனைவி இருவரும் வெவ்வேறு வீட்டில் பிறந்து வளர்ந்தவர்கள், அதில் ஒருவருடைய வீட்டின் பழக்கங்களை பிடிக்கவே இல்லையென்றாலும் இன்னொருவர் ரசிக்கக்கற்றுக் கொள்ளவேண்டும்

 கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் பிடிக்கும் பிடிக்காத விஷயங்களை வெளிப்படையாகப் பேசிக்கொள்ளுதல் நல்லது. 

வெகுநாட்களாக ஜோடிகள் இருவரும் பேசிக்கொள்ளாதபோது, ஒரு சிறு பிரச்னை என்றுவரும்போது, பிடிக்காத விஷயங்களைச் சொல்லி குத்திக்காட்டுவது அபத்தம். 

கணவர் வீட்டில் நடப்பதை நம் அம்மா, அக்கா, சித்தி என ஒன்றுவிடாமல் ஒப்பிப்பது தவறு. அதே தான் மனைவியின் நடத்தையை கணவர் தம் வீட்டிலும் சொல்லக்கூடாது. இருவரும் கலந்துபேசிவிட்டு சொல்வது இதில் அடங்காது. 

புதுமணத்தம்பதியிடையே ஒரு சிறு பிரிவு ஏற்படும்போது ஒருவரைப் பற்றி இன்னொருவர் சொந்தபந்தங்களிடம் தவறாகப் பேசக்கூடாது. காத்திருக்க வேண்டும். எல்லாம் சரியாகும். 

கணவன் - மனைவி இடையே இருக்கும் பிரச்னையைத் தீர்க்க முயற்சிப்பவர், வளர்ப்பவராக இருக்கக்கூடாது. சில நேரங்களில் தீர்க்க முயற்சிப்பவர்களாலே நிறைய உறவுகள் பிரிகின்றன. 

விட்டுக்கொடுத்தல், பொறுமை, நம் இணை காட்டும் அன்பைப் புரிந்துகொள்ள முயற்சித்தல் இவைதான் புதுமணத் தம்பதிகளின் ஒற்றுமைக்கான அச்சாரம். 

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.