'உங்கள் வீட்டில் குழந்தைகள் நன்றாகப் படிக்காமல் இருக்கிறார்களோ?’:எளிய வாஸ்து டிப்ஸ்!

By Marimuthu M
May 05, 2025

Hindustan Times
Tamil

ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்க வைத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருப்பர்.

உங்கள் குழந்தைகள் சரிவர படிக்கவில்லையா வாஸ்துபடி இந்த முறைகளைப் பின்பற்றுங்கள். இதனால் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுவர்.

அறையில் சரியான நிறங்கள்: உளவியலின்படி, குழந்தைகள் படிக்கும் அறை நல்ல வண்ணத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக, வெளிர் பச்சை மற்றும் வெளிர் பழுப்பு நிறம் ஆகியவை குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்ட உதவும் வண்ணங்கள் ஆகும் என வாஸ்து கூறுகிறது. 

இறைவனின் திருவுருவப்படம் தேவை:  உங்கள் வீட்டில் விநாயகரின் திருவுருவப் படமோ, விஷ்ணுவின் திருவுருவப் படமோ, முருகப்பெருமானின் திருவுருவப் படமோ ஒன்றை வாங்கிமாட்டுவது நல்லது. இப்படி செய்தால் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள்.குழந்தைகளுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் என வாஸ்து கூறுகிறது.

சரஸ்வதி யந்திரம்: குழந்தைகள் நன்கு படிக்க, திங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சரஸ்வதி தேவி யந்திரத்தை அறையில் நீங்கள் வைத்துப் பாருங்கள். இது நேர்மறை ஆற்றலைத் தருகிறது. மேலும், ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து அதன் மீது ஸ்வஸ்திகா முத்திரையை மஞ்சள் கொண்டு வரையவும். இதனால், குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

துளசி இலைகள்: குழந்தைகள் தினமும் துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், மூளை கூர்மையாக வேலை செய்யும். சுறுசுறுப்பாக இயங்கும். குழந்தைகள் துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் படிப்பில் ஆர்வம் கூடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

குறிப்பு: இது பரவலான மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட எழுத்து. வாசகர்களுக்கு அறிவிப்பதற்காக மட்டுமே வெளியிடப்பட்டது. 

அப்துல் கலாமின் இந்த வாக்கியங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்; அவர்களை உற்சாகப்படுத்தும்!