குருபெயர்ச்சி 2025 மூலம் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகும் ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan Apr 15, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி தேவர்களும் குருவாக திகழ்ந்து வருபவர் குரு பகவான். நவகிரகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாக குரு பகவான் வழங்கி வருகின்றார். குரு பகவான் அறிவு, ஞானம், செல்வம், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
Canva
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொடுத்தார். இவருடைய ராசி சுழற்சியை முடிப்பதற்கு சுமார் 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். தற்போது குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
Canva
இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
தனுசு ராசி: குருபகவான் உங்கள் ராசியில் மே மாதம் முதல் நான்காம் வீட்டில் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Canva
சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். அதனால் மே மாதம் முதல் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட காலமாக ஏற்பட்டு வந்த பண சிக்கல்கள் அனைத்தும் குறையும் எனக் கூறப்படுகிறது.
Canva
ரிஷப ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறையும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Canva
சிலோன் ஸ்டைலில் முட்டை கிரேவி சாதம் செய்வதை அறிந்து கொள்ளலாமா?