Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு புதிய வார்த்தைகளை கற்றுக்கொடுத்து, அவர்களின் மொழித்திறனை வளர்க்கலாம் வாங்க!
By Priyadarshini R Jun 21, 2024
Hindustan Times Tamil
குழந்தைகளுக்கு 8 வயதுக்குள் அதிகளவில் புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொடுப்பது, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இது அவர்களின் வாசிக்கும் திறனை நன்றாக மேம்படுத்தும்.
உங்கள் குழந்தைகளின் மொழித்திறனை வளர்ப்பதற்கு அவர்களுடன் உரையாடல்களை அதிகரிக்க வேண்டும். அது அவர்களுக்கு நல்லது. அவர்களிடம் அடிக்கடி பேசுவது மற்றும் உங்கள் குழந்தைகளுக்கு புதுப்புது வார்த்தைகளை அறிமுகப்படுத்தும்.
குழந்தைகளிடன் நாய்களுக்கு ‘பௌ, பௌ‘ உணவுக்கு ‘மம் மம்‘ என்று பேசுவது அழகாக இருக்கும். ஆனால் சரியான வார்த்தைகளை பயன்படுத்தும்போதுதான், அவர்கள் சரியான வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள உதவும்.
பெரிய வார்த்தைகளை பேசுவது உங்கள் குழந்தைகள் புதிய வார்த்தைகள் கற்பதையும், மொழித்திறனையும் பாதிக்காது. அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் என்றால், குழந்தைகள் சிக்கலான வார்த்தைகளை கற்க முடியும். எளிமையான வார்த்தைகளை கற்பதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சியே நீண்ட வார்த்தைகளை கற்பதற்கும் போதுமானது.
குழந்தைகள், பொருட்களின் பெயர்களை கண்களால் பார்த்து கற்பது அவர்களுக்கு படிக்கும்போது எளிமையாக புரிய வழிவகுத்து, அவர்கள் தெளிவாகப் படிக்க உதவுகிறது. இதனால் அவர்களால் தடையின்றி சத்தமாகப் படிக்க முடிகிறது. புத்தகங்களில் 50 சதவீதம் வார்த்தைகள் தினசரி உரையாடல்கள் அல்லது டிவி நிகழ்ச்சிகளைவிட அதிகம் உள்ளது.
சொல் அகராதியைப் பயன்படுத்தி, புதிய வார்த்தைகள் மற்றும் அவற்றுக்கான அர்த்தங்களை கண்டுபிடிக்க கற்றுக்கொடுங்கள். வார்த்தை விளையாட்டுக்களை ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தைளே வாக்கியங்களை அமைத்து விளையாட உற்சாகப்படுத்துங்கள்.
உங்கள் குழந்தைகள் கதைகளை சொல்வதற்கு ஊக்குவியுங்கள். புதிய வார்த்தைகளை கற்பதற்கும் அவர்களுக்கு உதவுங்கள். அவர்களின் மொழித்திறன் மற்றும் கிரியேட்டிவிட்டியை மேம்படுத்துங்கள்.
திருமணமான பெண்களே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா.. இந்த 4 தவறுகளை செய்யாதீங்க!