Enter text Here

Enter text Here

தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று முன் தினம்  நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தனுஷூம், செல்வராகவனும் மேடை ஏறி ஒருவரை ஒருவர் கேள்வி எழுப்பிக்கொண்டனர். 

By Kalyani Pandiyan S
Jul 07, 2024

Hindustan Times
Tamil

அப்போது செல்வா தரப்பில் இருந்து, உன்னை மிகச் சரியாக பயன்படுத்தியது நானா இல்லை வெற்றி மாறனா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, தனுஷ் பதில் தருவதற்குள் முந்திக்கொண்ட செல்வராகவன், தனுஷை சரியாக பயன்படுத்தியது வெற்றி மாறன் தான்.. அவர்தான் அவருக்கு அதிகமாக தேசிய விருதுகளை வாங்கி கொடுத்து இருக்கிறார் என்றார். 

நானா வெற்றிமாறனா?  இந்த நிலையில் அதற்கு பதிலளித்த  தனுஷ், நான் வெற்றி மாறன் உடன் இணையும் போது, எனக்கு கொஞ்சமாவது நடிக்கத் தெரியும். 

ஆனால் செல்வா என்னை நடிக்க வைக்கும் போது நான் வெறும் களிமண்தான். ஆகையால் நான் சொன்னதிலேயே  பதில் இருக்கிறது." என்று பேசினார். 

முன்னதாக பேசிய இயக்குனர் செல்வராகவன்," அப்போதிலிருந்தே ரஹ்மான் சாருக்கு நான் வெறித்தனமான ரசிகர். அவர் கடலில் குதி என்று சொன்னால் கூட நான் குதித்து விடுவேன். அவர் கடவுள் இந்த உலகத்திற்கு கொடுத்த குழந்தை. அவர் எப்படி ஒவ்வொரு நாளும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார் என்பதைப் பார்த்து நான் பிரமித்து போயிருக்கிறேன். உங்களுக்கு சிறுவயதில் தம்பி இருந்தால், தயவு செய்து நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். காரணம்,  பின்னாளில் அவர்கள் பெரிய ஆளாக வந்து உங்களை இம்சிக்க வாய்ப்பு இருக்கிறது. 

ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புதனை நவகிரங்களின் இளவரசன் என அழைப்பார்கள்